நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Monday, October 10, 2011

விருதுகளும் விம்மல்களும்………

நிறைய நாட்களின் பின் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
என்னையா??? ஓரே கவிதை வெளியீட்டு நிகழ்வுகளும் விருது வழங்கல் நிகழ்வுகளும் நிறைந்து போய்விட்டன… இது தமிழின் வளர்ச்சியா?? இல்லை வீழ்ச்சியா??? தெரியவில்லை. கடைசி 6 மாத காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுகளை பார்த்தாலே விளங்கும். இப்போது கவிதை வெளியீட்டு நிகழ்வில் விருது வழங்குவது சகஐம் ஆகிட்டு…. சும்மா சும்மா சும்மா எல்லாம் விருது கொடுக்கிறாங்கப்பா????விருது வழங்குவது நல்ல விடயம். ஆனால் அவ் விருது யாருக்கு ? யார் வழங்குவது என்பது தான் முக்கியம். விருது வழங்குவது என்பது மிகவும் எளிமையான விடயம் அல்ல. இப்படியான விடயங்களால் விருதுக்குரிய மதிப்பு குறைந்து போவதை நாம் காணமுடியும். விருதுக்குரிய மதிப்பை நாங்கள்தான் காப்பாற்றவேண்டும்.
அன்புள்ள கவிஞர்களே நீங்கள் எத்தனை கவிதை புத்தகங்களையும் வெளியிடுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் விருது கொடுக்கிறம் என்று சொல்லி விருதின் பெயரை பாழாக்கி விடாதீர்கள். விருதை பெறுபவர்களும் சற்று யோசிக்கவேண்டும்?? இவ்விருது எனக்கு ஏற்றதா?? இல்லையா?? நான் தகுதியா?? ஏன சிந்தியுங்கள். இதனால் சிலவேளை தங்கள் பெயரை தாங்களே பழுதாக்குகிறார்கள்.
இப்போது கவிதைப்புத்தகங்கள் வெளியிடுவது மலிந்து போய்விட்டது. இது கவிதைக்கு வந்த சாபக்கேடா??? அல்லது வளர்ச்சியா?? தெரியவில்லை. உண்மையில் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.
கவிஞர்களே தயவு செய்து கவிதையை பாழாக்கிவிடாதீர்கள். கவிதை என்பது ஒரு கவிஞனின் உணர்வு. உணர்வு ரசிக்கபடவேண்டுமே தவிர கடுப்பேற்றக் கூடாது………

2 comments:

Ratna said...

i like it mathu, its true, but we can't do anything. ur thinking in fantastic. well done,

MATHUKARAN said...

do not say we can not do any thing..

Post a Comment