நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, December 16, 2009

காதலைக் கட்டிலில்
கட்டிப் போட்டு
கால்கள் விரைந்தன

காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..

இன்னொரு பனிக்காலம்
இலைகளின் நுனியிலிருந்து
கண் சிமிட்டியது..
காத்திருந்து...காத்திருந்த

அலுத்த எனக்கு
கன்னத்தில் ஒரு முத்தம்
கயவனடா நீ.
கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்

இந்தக் காதலர் தினத்திலாவது!!!

Tuesday, December 15, 2009

PRINCIPLE OF OUR LIFE 5



PRINCIPLE OF OUR LIFE 4



PRINCIPLE OF OUR LIFE 3


PRINCIPLE OF OUR LIFE 2


PRINCIPLE OF OUR LIFE 1



Friday, December 4, 2009

தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது


மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?


செல்லமே.....



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய்....

நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்

எனக்கு ஒரு சந்தேகம் செல்லம
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?

Thursday, December 3, 2009

அம்மா

நான் சொல்லி முதலில்

அழுத மூச்சொலியே -அம்மா தான்
என்னை பிரசவிக்கும் வரை - என் உயிர் அவளிடம் தான்
அவள் என்னை சுமந்து
களைத்தபோது
எனக்கும் மூச்சு வாங்கியது!
அவளின் கருவறையை - நான்
கால்களால் உதைத்து
கைகளால் பிறண்டிய போது
அவளின் வயிறு வலித்ததை
சந்தோசம் - என நினைத்தவள் அன்னை!
எனக்கொரு மகன்பிறக்க மாட்டானா?
என ஏங்கிய போது என்னம்மா? எனக்கேட்கத்தூண்டியது
என்மனம் வெளிவர முடியாத நிலையில்
எப்படி பேசமுடியும் - ஆனால் உணர்ந்திருக்கிறேன்


என் முனியம்மா..



பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.


காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.


ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.


எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.


இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.


முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..


முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

Monday, November 30, 2009


காதலி
மணமாகிப்போனால்
காதலனின் உறவு
முட்டாள்தனமாய்!


வசதி இல்லாதவர்களின்
உறவு
வசதியானவர்களுக்கு
பைத்தியக்காரத்தனமாய்!


தடுக்கி விழுந்த
நண்பனின் உறவு
ஓடி ஜெயித்தவர்களுக்கு
உதவாக்கரையாய்!


அதிர்ஷ்டக்கார மகளின் உறவு
விதவையான பின்பு
எதிரில் வந்தால்
சகுனத் தடங்கலாய்!


அண்ணன் தம்பி உறவு
வரப்புத் தகராறில்
வன்முறையாய்!


செல்ல மகனின் உறவு
முதியோர் இல்லத்தில்
பெற்றோருக்குக் கதைகளாய்!


தாய் தந்தை உறவு
அரவாணிக்கு
ரயில் கானங்களாய்!


தெரியவில்லை
எதனால்
தீர்மானிக்கப்படுகி‎ன்றன
உறவுகள்......!






அதுவும் இதுவும்

அது என்னவென்று
இதைக் கேட்கிறேன்

இது என்னவென்று
அதைக் கேட்கிறேன்

அதை அதனிடமும்
இதை இதனிடமும்
கேட்டறியும் துப்பு
வாய்க்கவில்லை இன்னும்
ஆயினும்

அது இதுவாகவும்
இது அதுவாகவும்
ஆகிடும் தருணம்
இருக்கவும்கூடும்
எது எதுவாயினும்

அதுவே அது!
இதுவே இது!

Wednesday, November 25, 2009

OUR SCHOOL DAYS........


விடியல் பொழுதில் திறக்கும்சொர்க்க வாசலைப் போல,
கல்லூரி வாசல் நோக்கி,
ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள்நானும் அடக்கம்..

முதல் நாள்,

முதல் வகுப்பேதாமதமாய் நுழைந்த ஞாபகம்,
பரிச்சயம் இல்லாத முகங்கள்,
இருக்கை தேடி,அறிமுகம் நாடிபிள்ளையார் சுழி போட்ட,
முதல் கல்லூரி நட்பு,இன்றும் தொடரும் இன்ப இன்னல்...
இடைவெளியின்றி,
ஒவ்வொரு இடைவேளையும்அடித்த லூட்டி,
கண்ணைச் சொருகும்,

வகுப்பு நேரங்களில்,

குறும்புடன் படித்ததுண்டு சீட்டு பாடங்கள்,
ஒரே நிற ஆடை அணிந்த நாட்களில்,
ஓயாமல் ஒட்டிய ஞாபகங்கள்,
வெள்ளை சேட்டில்தேநீர் கறையாகிய நினைவுகள்,
பரிட்சை நேரங்களில்படிக்க மறந்த பாடங்களும்,
பிட் அடிப்பதற்கு எடுத்துச் சென்றஎண்ணற்ற
பேப்பர்களும்தேர்வு
முடிவு முன் தோன்றும் திகிலும்,
பின் தோன்றிய வேதாந்தமும்,
விடுமுறை நாட்களில்மஞ்சவனப்பதி வீதியில்
விளையாடியகிரிக்கெட்டும் சண்டைகளும்தேடிய விழிகளுக்கு கிடைத்தபார்வை பரிசுகள்,

எத்தனை முறை கேட்டாலும்புத்தியில் ஏறாத,
ஆசிரியரின் கடுஞ்சொர்க்களும் பாடங்களும்,
ஒன்றாய் உணவருந்திய உல்லாசங்களும்,
அன்பு,நட்பு,கோபம்ஊடல்,கூடல்,பிரிவுமௌனம்,வலி,
குறும்புஎன்றுமரக்கிளை முளைத்த இலைகளை போல,
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமாய்,
ஆயிரம் கோடி நினைவுகள்,என்றாலும்..
ஒரு துளி கண்ணீரால்,முற்றுப்புள்ளி வைக்கலாம்,
கல்லூரி வாழ்க்கைக்கும்,இந்த கவிதைக்கும்,
என் நினைவுகளுக்கு அல்ல..