நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, January 27, 2010

ஏ9 பாதையும் யாழ்ப்பாணமும்

முடியல! ஐயா! முடியல. என்ன கொடுமை சரவணா? எப்படி இருந்த யாழ்ப்பாணம் இப்படி ஆகிடிச்சே! ஏங்க நான் வளர்ச்சியை சொன்னன்.நம்புங்கையா?

திறந்தவெளி சிறைச்சாலையாக அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை ஏ9 பாதை திறந்து வைத்தவுடன் இப்போது குட்டி சிங்கப்பூர் ஆகிவிட்டது. வீதியோரக் கடைகளுக்கு பஞ்சமேயில்லை. எவ்வளவு வாகனங்கள்! எத்தனை மக்கள்! எத்தனை கடைகள்! உண்மையில் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. நல்லூர்த் திருவிழாவை விட மிக அதிகமான சன நெருக்கடியை யாழ் நகர் புறங்களில் அவதானிக்கமுடிகிறது.
உண்மையிலே எவ்வளவு காலங்கள்? நிறைய பிரச்சனைகள்? நாள்தோறும் ஏதாவது இன்னல்கள். அத்தனையும் முடிவுக்கு வந்து இப்போது கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாது வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வடக்குக்கும் தெற்குக்கும் இடையான இணைப்புபாலமாக இருந்த ஏ9 பாதையும் திறந்தாச்சு. 24 மணிநேரமும் பயணிக்க கூடிய வகையில் பாதையும் திறந்தாச்சு.



நாள்தோறும் யாழ்ப்பாணத்துக்கு வந்து குவியும் வாகனங்கள், மக்கள், பொருட்கள், என யாழ் நகரமே வியந்து நிற்கிறது. பெரிய நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் வந்து தமது முதலீட்டை இடுவது மகிழ்ச்சி தான். அதுபோல தாங்கள் யாழில் வேலையற்று தவிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவீர்களானல் உங்கள் வருகையால் அவர்களின் வாழ்க்கையும் நம்பிக்கை ஒளியூட்டும். அன்புள்ள நிறுவனங்களின் தவைவர்களே இதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

அதைவிட யாழுக்கு வந்து குவியும் மக்கள் தொகையை கண்டு வியந்து நிற்கிறது யாழ் சமூகம். இன மத பேதமின்றி உங்கள் வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். வாருங்கள். யாழ் மக்களுடன் பழகிப் பாருங்கள். எவ்வளவோ இன்னல்களையும் அனுபவித்து எவ்வளவு சந்தோசமாக உங்களை வரவேற்பதை பாருங்கள். உபசரித்து மகிழ்வதில் தமிழ் மக்களை தவிர இந்த பாரினுள் எவரும் இல்லை என்று உணர்த்துகிறார்கள். பாருங்கையா! பாருங்க!
இவற்றோடு வந்து குவியும் பொருட்கள். ஐயோ! வீதியோரக் கடைகளின் வருகை அதிகரிப்பால் யாழப்பாண கடை முதலாளிகள் மனம் கலங்கிப்போய் உள்ளனர். அவர்களையும் கொஞ்சம் எட்டி பாருங்க அன்புள்ள எம் உறவுகளே. எமக்கும் விளங்கிறது விலை வித்தியாசங்கள். யார் யாரைத் தான் நோக! என்ன செய்ய? யாழப்பாணத்துக்கு என்று உள்ள சில பொருட்களை கூட நீங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வந்து விற்பது மனதுக்கு மிக வேதனை அளிக்கிறது. அதிலும் நீங்கள் பலாப்பழம் கூட தென்னிலங்கையில் இருந்து கொண்டு வருவது மிக மன வேதனையாக இருக்கிறது. அன்புள்ள வீதியோர வியாபாரிகளே! கொஞ்சம் யாழ்ப்பாண பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்! பாவம் ஐயா! நம்ஊர் வியாபாரிகள்.


அன்புள்ள சுற்றுலா பயணிகளே! யாழ்ப்பாணம் அழகான பிரதேசம். வந்தோரை வாழ வைக்கும் நம்ம ஊர். எனவே அழகான ஊரை அசுத்தப்படுத்தாதீர். ஏ9 பாதை திறந்தவுடன் யாழ்ப்பாணத்தை பார்க்க டெங்கு நுளம்புக்கு கூட ஆசை வந்திட்டு போல. ஏய் டெங்கு நுளம்பே! உன்னால் 17 பேரை உட்கொண்டு விட்டாய். இன்னுமா தீரவில்லை உன் பசி. நிறுத்து. காணும் உன் விளையாட்டு.

உண்மையிலே ஏ9 பாதை திறப்பு யாழ்ப்பாண மக்களை பொறுத்த வரையில் மிக அவசிய தேவை ஒன்றாகும். பாதை திறந்தவுடன் இலகுவாக தென்னிலங்கையுடனான தொடர்பை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அத்தோடு அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துப் பொருட்களும் பெற்றுக் கொள்ளவதோடும் நியாய விலைகளில் கிடைப்பதும் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. அத்தோடு உங்களோடு சேர்ந்து நானும் யாழ்தேவியை புகையிரதத்தை யாழ்ப்பாணத்துக்கு எதிர்பார்த்தப்படி...........................................









குறிப்பு:

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எனது பதிவுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் தவறுகளை இயன்றவரை திருத்த முயற்சிக்கிறேன். தொடர்ந்து எனது வலைப்பதிவிற்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு........

Saturday, January 23, 2010

முடியல சாமி முடியல !!!!!!!!

நன்றி. நண்பர்களே. நன்றி.



எனது முதல் பதிவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியின் மகிழ்ச்சியுடனும் முதல் பதிவின் தொடர்ச்சியாகவும் இதை தொடரலாம் என்று மனம் சொல்கிறது. காரணம் நண்பர்கள் சொன்னார்கள். எனது முதல் பதிவு சொல்ல வந்த விடயத்தை மேலாக தொட்டுச் சென்றேதே ஒழியே விடயம் விளக்கமாக ஆராயப்படவில்லை என்ற வருத்தங்கள் இருந்தன. எனினும் எனக்கு அதை விளக்கமாக எழுத போய் அது நல்ல அறிவிப்பாளர்களையோ அல்லது நல்ல ஊடகவியலாளர்களையோ தாக்கும் என்ற ஐயப்பாடு இருந்தது. எனினும் எனது நண்பர்களின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் சொல்ல வந்த விடயத்தை மிகவிளக்கமாக எனக்கு தொந்த நடையில் பதிகிறேன்.



உண்மையில் முதலில் எனக்கு பதிவு இடவேண்டும் என்ற ஆசை வந்ததே லோஷன் அண்ணாவின் லோஷன் களம் பார்த்த பிறகே. அதை போலவே எனக்கு இந்த பதிவை இட தைரியம் வந்ததே அவரின் சில பதிவுகளை வாசித்த பிறகே. எனவே எதற்கும் அண்ணா லோஷன் அண்ணாக்கு நன்றி தெரிவித்து பதிவுக்குள் வரலாம் என்று எண்ணுகிறேன்.
ஊடகம் என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல இலகுவாக பிரபல்யம் அடைவதற்கு ஒரு வழி எனலாம். அதற்கு இளைஞர்கள் படும் கஸ்டங்களும் வேதனைகளும் பற்பல. அண்ணா எனக்கு சந்தர்ப்பம் எடுத்து தாங்களேன்? என்று தனியார் ஊடகங்களில் வேலை செய்யும் அறிவிப்பாளர்களை கேட்பது வழமையாகி விட்டது. இதை பயன்படுத்தி ஒரு சில அறிவிப்பாளர்கள் செய்யும் கூத்துகள் பல. மீண்டும் சொல்கிறேன் இலங்கைத் திருநாடு நல்ல பல அறிவிப்பாளர்களை கண்டு இருக்கிறது. கண்டு கொண்டு இருக்கிறது. உண்மையிலே சில அறிவிப்பாளர்களின் பெயர்களை இந்த இடத்தில் குறிப்பிட்டால் மிகையில்லை. அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி  சண்முகம் ,  தயானந்த  என்று பழம் பெரும் அறிவிப்பாளர்களையும் அண்மையில் சாகித்திய விருது பெற்ற லோஷன் அண்ணாவையும் அதுபோல இளம் வயதில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்ற பதவியை வகிக்கும் நவா அண்ணாவையும் குறிப்பிட்டால் மிகையில்லை. ஆனால் அது போலவே இவ்வாறு குறுகிய சிந்தனை கொண்டவர்களும் வாழ்வதும் வேலை செய்வதும் இந்த கால கட்டத்தில் தான் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.











உண்மையில் நான் பதியப் போகும் விடயங்கள் ஊடகங்களில் இருப்;பவர்களுக்கு தெரியும். எனினும் நான் விரிவாக பதியக் காரணம் இனியும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ பாதிப்படையக்கூடாது. வாழ்க்கை என்பது எவ்வளவு போராட்டம் என்பது அவர்களுக்கு தெரியாது. ( அவர்கள் என்று குறிப்பிடுவது ஒரு சில அறிவிப்பாளர்களை) அவர்கள் தமது நோக்கம் முடிவடைந்தால் சரி என்று வாழ்பவர்கள்.







அறிவிப்பாளர்களுக்கு உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமையே முக்கியகாரணம் எனலாம். அறிவிப்பாளருக்கும் நேயருக்கும் இடையில் உள்ள இடைவெளி தொடர்ந்து பேணப்படல் வேண்டும். இது பேணப்படாது விடத்து ஏற்படும் சிக்கல்கள் அதிகம். ஒரு நேயரோ அறிவிப்பாளரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடக்கூடாது. அது போலவே அறிவிப்பாளரும் தனது தனிப்பட்ட விடயங்களை நேயரிடமும் பகிரக்கூடாது. நீங்கள் சொல்வது புரிகிறது. இதை வாசித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் திருத்துவார்கள் ஐயா. திருத்துவார்கள். நம்புவம். நம்பிக்கை தான் வாழ்க்கை. இல்லையா!.


அது போலவே இன்னொரு காரணமாக தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை நேயர்களுக்கு வழங்குதலும் நேயர்களின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை பெற்று தேவையில்லாத வீண் பேச்சுகளில் ஈடுபடுவதாலும் பிரச்சனைகள் கிளம்புகின்றன.


அதைவிட கொழும்பு மாநகரம் எங்கு பார்த்தாலும் அறிவிப்பாளர்கள் பயிற்சி நிலையங்கள். ஐயா சாமி நீங்கள் வழங்கும் சான்றிதழை காட்டினால் தான் வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ வேலைக்கு சேர்ப்பார்கள் என்று இல்லை. நேர்முகத் தேர்வு வைப்பவர்கள் அதை பற்றி கணக்கெடுக்கிறார்கள் இல்லை. சரி  நாங்க விடயத்துக்கு வருவம். இப்படியான பயிற்சி நிலையங்களால் நான் கூறிய சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாகிறது. தமது நிகழ்ச்சியில் தான் சுயபுராணம் பாடுகிறார்கள் என்றால் பயிற்சி நிலையங்களிலும் சுயபுராணம் பாடி தமது நிலையை உயர்த்தி கொண்டு அங்கு கற்கும் மாணவர்களுக்கு நாங்கள்


வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ உங்களுக்கு சந்தர்ப்பம் எடுத்து தருகிறோம் என்று ஆசை காட்டி..................... வேண்டாம் ஐயா! மிகுதி வேண்டாம் ஐயா!


அது போலவே அறிவிப்பாளர்கள் தமது சுயபுராணம் பாடுவதை நிறுத்த வேண்டும். சுயபுராணம் பாடி தம்முடன் பிரச்சனையானவர்களை வானலையில் மறைமுகமாக கிண்டலடித்தல் அவர்கள் சம்பந்தமான பாடல் ஒலிபரப்பல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதை தவிர்த்தல் வேண்டும்.


அதை விட தமது மற்றைய சக அறிவிப்பாளர்களை பற்றி மிக கேவலமாக தமது நேயர்களிடம் வதந்தியை பரப்பி விடுவதும் இவர்களின் வேலையாக இருக்கிறது. எனவே இவ்வாறான நம்பிக்கை துரோகிகளுடன் வேலை செய்யும் நல்ல அறிவிப்பாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.


இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.


அன்புள்ள வாய்ப்பு தேடி அலையும் ஆண்களே! பெண்களே!


அனைவரையும் உடனே நம்பிவிடாதீர்கள். சில நரிகளும் ஊடகத்தினுள் இருக்கிறார்கள்.( நரி என்று குறிப்பிட்டதுக்கு மன்னியுங்கோ. எனக்கு தெரியவில்லை சம்பந்தப்ட்ட அறிவிப்பாளர்களை விழிப்பதற்கு) அவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். குறிப்பாக பெண்மணிகளே! நீங்கள் தான் கவனம். நான் ஏன் உங்களை விழிப்பாக இருக்க சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.


இவ்வாறான நாpகள் வேலை செய்யும் நிலையங்களின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரிகளே!


இது உங்களின் கவனத்துக்கும்! ஆனால் ஏற்கனவே சில விடயங்கள் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருப்பட்டதாம் என அறிகிறோம். பரவாயில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட நரிகள் நன்றியுள்ள நாய்களாக மாறட்டும்.






அன்புள்ள நண்பர்களே!


நான் சிறுவன். எனவே மேலே பதியப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை. ஆனால் நான் சொல்ல வந்த விதம் தவறு என்று உணர்ந்தால் மன்னியுங்கோ........





Friday, January 22, 2010

1 வது பதிவு .............


1 வது பதிவு .............




எனது முதலாவது பதிவுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இனி நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்ற மகிழ்வோடு எனது முதல் பதிவுக்குள் நுழைகிறேன்..



என்னடா முதல்பதிவு பதியலாம் என்ற எண்ண அலைகளுடன் நான் மோதிக்கொண்டேன். அரசியல் போடலாமா என்றால் "ஏன்டா சாமி உயிரோடு இருக்க ஆசையில்லையா? என்று மனது சொல்வது புரிந்தது. என்ன போடலாம் போடலாம் என்று யோசித்த போது மனதில் பட்டதை எழுதுகிறேன். புரிபவர்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி. திருந்தினால் சந்தோசம்.



அன்புள்ள சில ஊடகத்துறை நண்பர்களே..........
 உங்கள் நடவடிக்கைகளால் ஊடகத்துறை வெட்கித் தலை குனிகிறது. ஊடகத்துறை என்பது மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது எவ்வளவு அவசியமானது என்று அனைவருக்கும் தொpயும். அதேபோல ஊடகத்துறை மூலம் இப்போது இலகுவாக பிரபல்யம் அடைந்திடலாம். இதை பயன்படுத்தி இடம்பெறும் சில சம்பவங்களால் மனம் வேதனை அடைகிறது. நான் ஊடகத்துறையை நேசிப்பவன் என்பதாலேயே என் முதல் பதிவில் இடுகிறேன். ஊடகத்துறை என்பது தற்போதைய காலகட்டத்தில் இலங்கையை பொறுத்தவரையில் மிக ஆபத்தான காலகட்டம் தான். எனினும் ஊடகத்துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. ஊடகங்கள் என்றால் என்ன? ஊடகங்களின் பங்களிப்பு என்ன? என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை முன் வைப்பர். இருப்பினும் இதை பற்றிய விடயங்களை வேறொரு பதிவில் இடுகிறேன்.

எனது பதிவில் இட வந்த விடயத்துக்கு வருகிறேன். நான் தொpவிக்கும் கருத்து ஊடகங்களுக்குள் இருக்கும் சில நன்நடத்தை இல்லாதவர்களுக்காக மட்டும் தான்.

நல்ல ஊடகத்துறை நண்பர்களும் நம் இடையே உள்ளார்கள். நான் தொவிக்கும் கருத்தால் அவர்கள் மனது வருத்தமடைந்தால் மன்னிக்கவும்.

ஆம்.

இலகுவாக பிரபல்யம் அடையலாம் என்று எண்ணி ஊடகங்களுக்கு நுழைய காத்திருக்கும் ஆண்களும் பெண்களும் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். அதிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்பல. குறிப்பாக தனியார் வானோலிகள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனங்களில் சந்தர்ப்பம் பெற்று தருவதாக இடம் பெறும் மோசடிகள் பல. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இதில் படுமோசமான விடயம் சில பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

Abdul Hameed போன்ற தலை சிறந்த அறிவிப்பாளர்களை தந்த இலங்கைத் திருநாட்டில் உங்களை போன்றவர்களும் வாழ்வதில் மிகவும் கவலையாக இருக்கிறது. எனவே அன்புள்ள நண்பர்களே இனிமேலோவது தங்கள் செயல்களில் நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு முதல் பதிவில் இருந்து விடை பெறுகிறேன்.