நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Monday, February 13, 2012

என்னை மறக்கவிடு........


கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கலந்து களித்த நாட்களை
களவாடிப் போனது யார்?
களைத்து போனேனடி சகியே...

அன்று உன்னோடு அத்வைதமான
அந்த நல்ல நாட்களை - இன்று
அழித்தெறிந்து போனது யார்?

என் கோபுரக் கனவுகளை
கொல்லியிட்டு
இன்னொரு இதயம் தொட்டு நிற்பவளே.

கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கொடிநடையாய் என் நினைவுகளை
போகவிடு
என்னை மறக்கவிடு........