நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, May 30, 2010

யாழ்ப்பாணம் எங்கு நோக்கி?????????

என்ன? தலையங்கத்தை பார்த்து யோசிக்கிறிங்களோ? ஆமாங்க. எனக்கும் தெரியவில்லை யாழ்ப்பாணம் எங்கு நோக்கி பயணிக்கிறது என்று? வடக்கின் வசந்தத்தை நோக்கியா? அல்லது வேறு நாம் சொல்ல முடியாத திசை நோக்கியா? கூறமுடியவில்லை.

4 நாள் விடுதலை. என்ன செய்யலாம் என்றால் வழமையாக அனைவரும் கூறுவது போல ஊருக்கே போகலாம் என்ற முடிவோடு புதன் இரவே பயணிக்கலாம் என்ற முடிவோடு தனியார் பஸ்க்கும் பதிந்து எமது பயணத்தை ஆரம்பித்தோம். பஸ்ஸில் செல்ல பதிந்து கொடுப்பவர்கள் இருக்கிறார்களே??? அவர்களின் புத்தி என்றாலா? அவர்களின் அசைவுக்கும் நாம் தலையசைத்து இரவு 8.30 க்கு பஸ்ஸில் ஏறிய நாம் கொழும்பு மாநகரத்தை விட்டு விலக 11.00 க்கு மேலாகிவிட்டது. எனினும் சாரதியின் சிறந்த வாகன செலுத்தல் திறமை மூலம் நாம் யாழ்ப்பாணத்தை கிட்டத்தட்ட காலை 7.00 அளவில் அடைந்து விட்டோம்.

எனினும் எனக்கு இது யாழ்ப்பாணம் தானா? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்தவாறே இருந்தது? எங்கு பார்த்தாலும் வெசாக் கொண்டாட்டங்கள் வெசாக் கூடுகள் என்று பலவாறு அடுக்கி கொண்டே போகலாம். எங்கு திரும்பினாலும் சிங்களத்தில் உரையாடும் மக்கள் , நம் மக்கள் என காலை 7.00 க்கே பரபரப்பான நகரமாக மாறியிருக்கிறது.
உண்மையில் இது மகிழ்சசியான விடயம் தான். எப்படி இருந்த நகரம் இப்ப எப்படி மாறியிருக்கிறது!!!. சந்தோசம் தான். எனினும் நமக்கு என்று இருக்கும் பழக்கவழக்கங்களை மாற்றியிருப்பது வருத்தத்தமளிக்கிறது. எப்போதும் நாம் நாமாக இருந்துவிட்டால் பிரச்சனை வராது. 


இப்போ நம் மக்கள் பணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட சக மனிதர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை.
                             "பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்"
                                                                         சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.

என்ன செய்ய? காசு காசு காசு என்று மக்கள் பேய் பிடித்தது போல் அலைகிறார்கள். பணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட சக உறவுகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. மனிதர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. சக நண்பர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. பணம் இன்று வரும். நாளை போகும். ஆனால் உறவுகளும் நண்பர்களும் தான் நம் இறுதிக்காலம் வரை வருவார்கள். என்று தான் நம் மனிதர்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
 பணத்துக்காக உறவுகளையே தூக்கி எறியும் உறவுகள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இம் மனிதர்கள் இன்றும் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதுதான் பு
ரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு யாழ்மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறார்கள். 


அனைவரும் ஒன்றுபடுங்கள். குடும்பங்களில் ஒற்றுமையை பேணுங்கள். உறவுகள் நண்பர்கள் என்று ஒற்றுமையாக இருங்கள். பணம் சம்பாதியுங்கள். அதைவிட 4 மனிதர்களையாவது வாழ்க்கையில் சம்பாதித்து வையுங்கள். இறுதிக்காலத்திலாவது உதவும்.

நெருப்பில்லாமல் புகையாது.
அப்படியே தான்
என் புன்னகையும் விடயமில்லாமால்
புன்னகைக்காது................  

Sunday, May 9, 2010

அன்னையே உன் பாசத்துக்கு ஈடு இணையேது ......

 

ஈரைந்து மாதங்கள் சுமந்து 

ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று என்னாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடில்லை
ஊண் உறக்கம் மறந்து
எம்மை உயிரைப் போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்
அன்னையே உன் பாசத்துக்கு
ஈடு இணையேது
ஆண்டவன் கூட
மண்டியிடுவான் உன் பாசத்துக்கு..........

  

 

அம்மா..........தனியே இப்போ இருக்கும் போதுதான் தெரிகிறது உன் அருமை. உன் பாசம். உன் அன்பு.....

தன் நலம் கருதாது என் நலம் காக்கும் என் அன்பு தெய்வம் என்
அம்மாவுக்கு இனிமையான வாழ்த்துக்கள்....இன்று போல் என்றும் இன்னும்
நூறாண்டுகள் கடந்து வாழ உன் மகனின்பிரார்த்தனைகள்