நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Tuesday, August 31, 2010

EX 2010 @ IET


எந்திரவியல் தொழில்நுட்பத்துக்கே முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கும் கட்டுநாயக்காவில் உள்ள எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனம் தமது 25 ஆம் ஆண்டு நிறைவை இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுகிறது. இவ் 25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ் எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தை பற்றி பார்ப்போம் ஆனால்  INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எமது நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று தனது வெள்ளி விழாவில் சிறப்பித்துக் கொண்டு இருக்கிறது. 25 வருடங்களாக சேவையாற்றும் நிறுவனமானது  NDES ( NATIONAL DIPLOMA IN ENGINEERING SCIENCES )  எனும் பட்டத்துடன் வெளியேற்றி வருகிறது. இக் கற்கை நெறியானது NAITA  இன் அணுசரணையுடனும் INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY  இன் வழிகாட்டலில் இயங்குகிறது.
இங்கு  CIVIL, MECHANICAL , ELECTRICAL    எனும் பிரிவுகளில் மாணவர்களுக்கு போதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ் கற்கைநெறி முழுமையாக ஆங்கிலத்தில் போதிப்பதோடும் 4 வருட கற்கைநெறிகளில் 2 1/2 வருடங்கள் தனியே வேலை தளங்களில் பயிற்சியை வழங்குவது குறிப்பிட்டு சொல்ல கூடிய அம்சமாகும்.
மேலதிக விடயங்களுக்கு.....
         WWW.NDES.LK     OR    WWW.IET.EDU.LK   

25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இக் கண்காட்சி முழுமையாக எந்திரவியல் சம்மந்தமாக மட்டும் கொண்டது. அதோடு வேடிக்கைகள் கேளிக்கைகள் என்பவற்றுக்கும் குறையில்லாமல் வருவோரை முழுமையாக ஆச்சரியத்துக்குள்ளாக்கும் என்பதை எவ்வித பயமுமின்றி கூறலாம். அவ்வளத்துக்கு தமது திறமைகளை காட்டுவதற்கு மாணவர்கள் தயாராகி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சமாகும்.

மேலதிக விடயங்களுக்கு              www.ietex2010.lk


அத்தோடு இவ் 4 நாட்களும் கண்காட்சி தகவல்களை வழங்குவதற்காக 
FM NDES  எனும் வானோலிச் சேவையையும் VISION NDES    எனும் தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இச் சேவை 3 மொழிகளிலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


எனவே இக் கண்காட்சியை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Saturday, August 7, 2010

வச்சாங்கையா ஆப்பு நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு ஆப்பு!!!!!!!

நல்லூர் ஆலய பெருந்திருவிழா ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. நல்லூர் ஆலய திருவிழா என்றாலே யாழ் நகரமே விழாக்கோலம் தான். பக்தி, ஆன்மீகம் என்று ஒருபக்கம் இருந்தாலும் கேளிக்கைகள் ,கடைத்தொகுதிகள் என்று குறைவே இல்லை. அதுபோலவே நம் ஊரு பொண்ணுகளுக்கும் குறைவே இல்லை. வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தும் வெளிக்கு வந்துவிடும். அதுபோலவே பொண்ணுகளின் உடைகளுக்கும் குறைவே இல்லை. என்னையா உடுப்பு போடுறாங்க??? முடியல!!!! வீதியில வேறு ஆட்களும் போறவங்க எண்டு தெரியல போல. தாங்கள் தனியத்தான் போகினம் எண்டு நினைப்போ தெரியல.



இதுக்கல்லாம் முடிவு கட்டதான் இம்முறை நல்லூர் ஆலயத்துக்குள் உள்நுழைய வேண்டும் எனில் பெண்ணில் தமிழ் கலாச்சாரம் தெரியவேண்டுமாம். ஆகா!!!! இம்முறை கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்ககலாமோ!!!!!!! பெண்கள் சாறி ,தாவணியுடன் தான் உள்நுழையலாம். இம்முறை கோவிலுக்குள் அதிகம் சனநெருக்கடி குறையும். ஆனால் வெளியில் நல்ல சனநெருக்கடியாக இருக்கும். இம்முறை ஏ9 திறந்திருப்பதால் சனநெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. அதுபோலவே அனைத்து கேளிக்கைகள் வேடிக்கைகள் என்று அனைத்துக்கும் பஞ்சமே இருக்காது.

எனினும் இவ்வாறான இடங்களில் தான் தங்கள் கலை கலாச்சாரங்களை பேண வேண்டிய இடங்களாகவும் காக்க வேண்டிய இடங்களாகவும் இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய தருணம். இப் பதிவு வெறும் சின்ன விடயமாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நம் கலாச்சாரங்களை நாமே தான் காப்பற்றவேண்டும். அந்த அந்த இடங்களுக்கு உரிய உடைகளை உடுக்கவேண்டும். நாம் நாமாவே இருந்து விட்டால் பிரச்சனை ஏது???????
                  இனி இப்படிதான் போகலாமோ??????? ஆகா!!!!!!!!!

எனினும் இம்முறை நல்லூரில் அமுலாகும் இச்சட்டம் எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இது நம்ம ஊரவர்களுக்கு மட்டும்தானா????? அல்லது பார்ப்பம் பார்ப்பம்........ எனினும் நம்மவர்கள்; ஒழுங்காக இருந்தால் பிரச்சனையே இல்லை.  

                     ஆப்பு கண்ணுக்கு தெரியாதுஎல தெரியாது.............